Showing posts with label கவிதை மாதிரி. Show all posts
Showing posts with label கவிதை மாதிரி. Show all posts

Sunday, December 15, 2013

பனிக் காலம்

Old picture from Internet

கூட்டை அடைந்த பறவை போல,
வளைக்குள் ஒளிந்த எலியை போல,
நத்தை ஓட்டுக்குள் சுருண்ட வாழ்கை
வரும் மூன்று திங்களுக்கு!

உள்ளொன்று புறமொன்று அணிந்து,
மேலொரு அங்கி அணிந்து,
கழுத்திலே ஸ்கார்ப் அணிந்து,...
காது மறைக்க குல்லாய் அணிந்து,
கைக்கு விதவிதமாய் கையுறை அணிந்து,
காலுக்கு கம்பளி சாக்ஸ் அணிந்து,
அதன் மேலே ஷு அணிந்து,
இத்தனை அணிந்தும்
உள்ளுடல் சுருக்கி
வெளி செல்ல வேண்டும் கிளியே!
பனிக்காலம் வந்ததடி கிளியே!
வாழ்கை சோம்பல் ஆனதடி கிளியே!


                      Winter 2013 Start already!